ETV Bharat / bharat

கர்நாடகாவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ... தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பு தீவிரம்...

author img

By

Published : Nov 19, 2022, 10:39 PM IST

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடகாவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ
கர்நாடகாவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மங்களூரு காவல் ஆணையர் என் சசிகுமார் கூறுகையில், மங்களூருவின் கண்கனாடி பிஎஸ் பகுதியில் மாலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது தீப்பற்றியதால் ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர். முதல்கட்ட தகவலில் பயணி எடுத்துச்சென்ற தீப்பற்றக்கூடிய பொருள்களாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கர்நாடக-தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்துவருகிறது. அதேபோல எல்லையையொட்டியுள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மங்களூரு காவல் ஆணையர் என் சசிகுமார் கூறுகையில், மங்களூருவின் கண்கனாடி பிஎஸ் பகுதியில் மாலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது தீப்பற்றியதால் ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர். முதல்கட்ட தகவலில் பயணி எடுத்துச்சென்ற தீப்பற்றக்கூடிய பொருள்களாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கர்நாடக-தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்துவருகிறது. அதேபோல எல்லையையொட்டியுள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜார்க்கண்டில் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.